Monday 21 January 2013

ஆவாரை.


ஆவாரை.

மருத்துவப் பயன்கள் -: ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

முறை -: அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.



ஆவராரம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து வந்தால் உடல் 

ஆவராரம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். சிலரது தோலில் உப்பு பூத்தாற்போல் வரண்டு இருக்கும் வியர்வையில் துர்வாடை வீசும் அடிக்கடி நாக்கு வறன்டுவிடும் இதை அனைத்தையும் போக்க சிறந்த மருந்து ஆவராம்பூ.
 
ஆவாரம்பூவைக்கொண்டு செய்யப்படும் சர்பத்தால் ஆண், பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் குணமடையும். உறக்கத்தில் விந்து வெளிப்படுதல் மற்றும் உடல் நமைச்சல் அடங்க ஆவாரம்பூ சர்பத் மிகவும் உகந்தது.
 


கண்நோய் உள்ளவர்கள் இதை வதக்கி இரவில் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் விரைவில் குணமடையும்

பொன்னிறமாக மாறும். சிலரது தோலில் உப்பு பூத்தாற்போல் வரண்டு இருக்கும் வியர்வையில் துர்வாடை வீசும் அடிக்கடி நாக்கு வறன்டுவிடும் இதை அனைத்தையும் போக்க சிறந்த மருந்து ஆவராம்பூ.
 
ஆவாரம்பூவைக்கொண்டு செய்யப்படும் சர்பத்தால் ஆண், பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் குணமடையும். உறக்கத்தில் விந்து வெளிப்படுதல் மற்றும் உடல் நமைச்சல் அடங்க ஆவாரம்பூ சர்பத் மிகவும் உகந்தது.
 
கண்நோய் உள்ளவர்கள் இதை வதக்கி இரவில் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் விரைவில் குணமடையும்



No comments: